குஜராத்தில் மீண்டும் பாஜ ஆட்சி: புதிய கருத்து கணிப்புகள் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குஜராத்தில் மீண்டும் பாஜ ஆட்சி: புதிய கருத்து கணிப்புகள் தகவல்

புதுடெல்லி: குஜராத்தில் பாஜ மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என புதிய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. குஜராத் சட்டசபைக்கு வரும் 9 மற்றும் 14ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த தேர்தலில் பா. ஜ.

, காங். கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது யார் ஆட்சியை பிடிப்பர் என்ற கேள்விக்கு மூன்று விதமான கருதது கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதில் மீண்டும் பா. ஜ. வே ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பா. ஜ. 106 முதல் 116 இடங்களையும், காங். , 63 முதல் 73 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ்நெவ் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் பா. ஜ.

111 இடங்களிலும் காங்கிரஸ் 68 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது. ஏபி. பி-சி - சி. எஸ். டி.

எஸ். நடத்திய கருத்துக் கணிப்பின்படி பா. ஜ.

105 முதல் 106 இடங்களிலும், காங். 73 முதல் 74 இடங்களிலும் வெற்றி பெறும்.

இந்த கருத்து கணிப்புகள் வாயிலாக பா. ஜ. வின் வாக்கு சதவீதம் குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது. பா. ஜ.

தேசிய தலைவர் அமித்ஷா , இந்த சட்டசபை தேர்தலில் பா. ஜ. வரலாறு காணாத வகையில் 150 இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு பா. ஜ. 127 இடங்களை பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத் தக்கது.


.

மூலக்கதை