திறந்தவெளியில் படுக்க வைக்கப்பட்ட குழந்தைகள்; நெல்லையில் அவலம்

தினமலர்  தினமலர்
திறந்தவெளியில் படுக்க வைக்கப்பட்ட குழந்தைகள்; நெல்லையில் அவலம்

திருநெல்வேலி: டெங்கு பாதித்த 70 குழந்தைகளை திறந்தவெளியில் படுக்கவைக்கப்பட்ட அவலம் நெல்லை அரசு மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 70 குழந்தைகள் திறந்தவெளியில் படுக்கவைக்கப்பட்டனர். இதனையடுத்து அதிகாரிகளுடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிகிச்சை பெற்று வந்த அறையில் ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று(நவ.,25) நடைபெறவிருப்பதாகவும், அதற்காக அறையை தயார் செய்வதற்காக டெங்கு பாதித்த குழந்தைகள் அனைவரும் மருத்துவமனைக்கு வெளியே திறந்தவெளிக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மூலக்கதை