ஹாங்காங் ஓபன் அரை இறுதியில் பி.வி.சிந்து

தினகரன்  தினகரன்

ஹாங்காங் : பிரபல சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரான ஹாங்காங் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். கால் இறுதியில் ஜப்பானின் அகானே யாமகுச்சியுடன் நேற்று மோதிய சிந்து 21-12 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் யாமகுச்சி கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், பதற்றமின்றி விளையாடி புள்ளிகளைக் குவித்த சிந்து 21-11, 21-19 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 37 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இன்று நடைபெறும் அரை இறுதியில், முன்னாள் உலக சாம்பியன் ரட்சனோக் இன்டனான் (தாய்லாந்து) சவாலை சிந்து எதிர்கொள்கிறார்.

மூலக்கதை