‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை

தினமலர்  தினமலர்
‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: இது அடுத்த சர்ச்சை

பாட்னா: லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரசாத் கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி தரப்படும் என பா.ஜ., பிரமுகர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீடு புகுந்து தாக்குவோம் என ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் மிரட்டல் விடுத்திருந்தார். இவர் பேசிய வீடியோ வைரலாக பரவியது.

இந்நிலையில் பாட்னா மாவட்ட பா.ஜ., ஊடக தொடர்பாளர் அனில் சானி என்பவர், தேஜ் பிரதாப் யாதவ் கன்னத்தில் அறையும் நபருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவரது வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விசாரணைக்குபின் அனில் சானி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில பா.ஜ., தெரிவித்துள்ளது.

மூலக்கதை