கோவாவில் இருந்து புனே சென்ற சொகுசு பஸ் தீப்பிடித்து 2 பயணிகள் கருகிச்சாவு

தினகரன்  தினகரன்

கோலாப்பூர்:  கோலாப்பூரை சேர்ந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு கோவாவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புனேக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை பஸ் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள லோங்கேகாவ்  அருகே வந்தபோது ஏ.சி. இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.  இதையடுத்து டிரைவர் பஸ்சை உடனடியாக நிறுத்தி 16 பயணிகள் இறங்கிய நிலையில் 2 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பண்டிராஜ்பட் (20), மதன் பட் (25) ஆகிய இருவரும் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை