ஆந்திர முன்னாள் முதல்வர் கிரண் குமார் சகோதரர் தெ.தேசத்தில் சேர்ந்தார்

தினகரன்  தினகரன்

திருமலை : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் சகோதரர் கிஷோர்குமார் ரெட்டி முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் சகோதரர் கிஷோர்குமார் ரெட்டி. இவர், கடந்த 17ம் தேதி தனது மகன் அமர்நாத் ரெட்டியுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தார். அப்போது 40 பஞ்சாயத்து தலைவர்களுடன் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். சித்தூர் மாவட்டத்தில், கிரண்குமார் ரெட்டியின் தந்தை நல்லாரி அமர்நாத் ரெட்டி காங்கிரசில் முக்கிய பங்கு வகித்தவர். முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசியலுக்கு வருவதற்கு நல்லாரி அமர்நாத் ரெட்டி முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு விஜயவாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் கிஷோர்குமார் ரெட்டி தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

மூலக்கதை