எகிப்து மசூதியில் குண்டு வெடிப்பு: 85 பேர் பலி
கெய்ரோ: எகிப்தின் வடபகுதியான சினாயில் உள்ள அல் ராவ்டா மசூதியில் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 85 பேர் பலியானார்கள். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் சதிகளால்,இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக உள்ளூர் டி.வி சானல்கள் தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அங்கு நுாற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.