அகதியை அறைந்த காவல்துறை அதிகாரி! - சிறைத்தண்டனை!!
அகதி ஒருவரை அறைந்த காரணத்துக்காக காவல்துறை அதிகாரிக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பிரான்சின் எல்லை பகுதியான பா-து-கலே அகதி முகாமில் இருந்த அகதி ஒருவரை அறைந்த காரணத்துக்காகவே காவல்துறை அதிகாரிக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரியின் வழக்கறிஞர் இது குறித்து தெரிவிக்கையில், 'சம்பவத்தின் போது அவர் அகதி என்பதை காவல்துறை அதிகாரி அறிந்திருக்கவில்லை. குற்றவாளி விலங்கிட மறுத்த காரணத்தினாலே தாக்கியுள்ளார். அகதி என்பதால் தாக்கியுள்ளார் என்பதில் உண்மை இல்லை!' என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றம் அவருக்கு ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கியும், ஐந்து வருடங்களுக்கு ஆயுதம் வைத்திருக்கவும் அனுமதி மறுத்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த அதிகாரிக்கு 40 வயது என தெரிவிக்கபப்பட்டுள்ளது.