மெத்தியூஸிற்கு மீண்டும் வாய்ப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
மெத்தியூஸிற்கு மீண்டும் வாய்ப்பு!

மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி கிரிக்கட் போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும், மெத்தியூஸ் நியமிக்கப்படவுள்ளதாக, உறுதிபடுத்தப்படாத தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 
முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் அணித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதையடுத்து, உபுல் தரங்க அந்த பொறுப்பினை ஏற்றார்.
 
எனினும், அவரால் தலைமைப் பொறுப்பினை சிறப்பாக செயற்படுத்த முடியாமல் போக, அவரைத் அணித்தலைமையிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
அவரது தலைமையில், இந்திய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரை இலங்கை முழுமையாக இழந்தது. அதேபோல், பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரிருவென்ரி தொடரையும் இலங்கை முற்றுமுழுதாக இழந்தது.
 
இந்நிலையில், அவரை தலைமைப்பொறுப்பிலிருந்து நீக்கி மீண்டும், மெத்தியூஸிற்கே அணித் தலைமையினை வழங்ககும் முயற்சியில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஈடுபட்டுள்ளது.
 
இந்த பொறுப்பினை அவர் ஏற்க மறுக்கும் பட்சத்தில், அவருக்கு பதிலாக அசேல குணரட்ன அல்லது திசர பெரேரா ஆகியோரில் ஒருவருக்கு அந்த பொறுப்பினை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மூலக்கதை