ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் கால் இறுதியில் பி.வி.சிந்து : சாய்னா ஏமாற்றம்

தினகரன்  தினகரன்

ஹாங்காங் : ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார். சாய்னா நெஹ்வால் தோல்வியுடன் வெளியேறினார். ஹாங்காங்கில் நடக்கும் இத்தொடரில் 2ம் சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. இதில், சிந்து, ஜப்பானின் அயா ஒஹோரியை எதிர்த்து விளையாடினார். அபாரமாக ஆடிய சிந்து, வெறும் 39 நிமிடத்தில் 21-14, 21-17 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் சிந்து, ஜப்பானின் அகானே யமாகுசியை சந்திக்கிறார். யமாகுசி சமீபத்தில் நடந்த சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.மற்றொரு போட்டியில், சாய்னா நெஹ்வால் 21-18, 19-21, 10-21 என்ற செட்களில் சீனாவின் சென் யுபையிடம் போராடி தோல்வி அடைந்தார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரன்னாய் 21-11, 10-21, 15-21 என்ற செட்களில் ஜப்பானின் கஜூமசா சகாயிடம் தோற்றார்.

மூலக்கதை