சார்லி-எப்த்தோ தாக்குதல்! - ஆயுதம் வழங்கிய குற்றவாளிகள் மூன்று வருடங்களின் பின்னர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
சார்லிஎப்த்தோ தாக்குதல்!  ஆயுதம் வழங்கிய குற்றவாளிகள் மூன்று வருடங்களின் பின்னர் கைது!!

சார்லி-எப்த்தோ மீது தக்குதல் இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆன நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதலில் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
ஜனவரி 2015 ஆம் ஆண்டு சார்லி-எப்த்தோ பத்திரிகை அலுவலகத்திலும், kosher பல்பொருள் அங்காடியிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய இரு ஆண்களும், ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆண்களின் ஒருவர் Reims நகரிலும், மற்றையவர் Ardennes இலும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்கள் தான், தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். தவிர, கைது செய்யப்பட்டவர்கள், ஜனவரி 7, 2015 ஆம் ஆண்டு காவல்துறை அதிகாரியை சுட்டுக்கொன்ற Cherif Kouachi மற்றும் Saïd Kouachi சகோதரர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், சதி திட்டத்தை Reims நகரில் வைத்து தீட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மறுநாள், சார்லி-எப்த்தோ தாக்குதலுக்கும் இவர்களே ஆயுதங்கள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இடம்பெற்ற விசாரணைகளை அடுத்து,  இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை