Yvelines - பாடசாலை அதிபரை கடித்துக்குதறிய மாணவனின் தாய்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Yvelines  பாடசாலை அதிபரை கடித்துக்குதறிய மாணவனின் தாய்!!

பாடசாலை மாணவன் ஒருவனின் தாய் ஒருவர், பாடசாலை அதிபரை கடித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. 
 
Yvelines மாவட்டத்தின் Houilles நகரில் உள்ள Guy-de-Maupassant பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலையின் அதிபருடன், 11 வயது மாணவனின் தாய் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுவனின் நடத்தை தொடர்பாக அதிபர் தெரிவித்த சில கருத்துக்கள் குறித்த தாயாரை கோபம் வரச் செய்ய, அதிபரின் முழங்கையில் பலமாக கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து மூன்று காவல்துறை அதிகாரிகளும், சில தீயணைப்புபடை வீரர்களும் விரைந்து சென்றுள்ளனர். 
 
45 வயதுடைய பெண்மணி உடனடியாக கைது செய்யப்பட்டு Sartrouville பகுதி காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது மிக 'மோசமான தாக்குத'லில் ஈடுபட்டதாக வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது.

மூலக்கதை