உலக அழிவிற்கான அறிகுறி தென்படுகின்றதா? அதிர்ச்சி தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
உலக அழிவிற்கான அறிகுறி தென்படுகின்றதா? அதிர்ச்சி தகவல்

இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அடுத்தடுத்து தொடர்ந்தும் பல நில நடுக்கங்களை பூமி சந்தித்து 2018ஆம் ஆண்டுகளுக்குள் உலகம் பாரிய அழிவைச் சந்திக்கும் என மேலைத்தேய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
2018 ஆம் ஆண்டுக்குள் உலகம் நிலநடுக்கங்களினால் பல அழிவைச் சந்திக்கும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
 
இந்த நிலையில் உலக அழிவு ஆரம்பித்துவிட்டது என சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர்.
 
சதியாலோசனை (Conspiracy theory) கோட்பாடு என்பது யூகத்தின் அடிப்படையில் ஒரு தனி நபர் அல்லது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தினால் முன்வைக்கப்படும் கோட்பாடு ஆகும்.
 
அதன்படி பூமியின் அழிவுக்கு வித்திடும் நிரூபு கிரகம் தற்போது பூமியை நெருங்கி விட்டதாகவும் அதன் அறிகுறியே தற்போது நில நடுக்கங்களாக தென்படுகின்றது எனவும் சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அவர்களின் கருத்துகளின் நம்பகத்தன்மையினை வலுப்படுத்தும் வகையில் இந்த நவம்பர் மாதம் அதிக நிலநடுக்கங்கள் பூமி முழுவதும் தொடர்ச்சியாக ஏற்பட்டவாறு காணப்படுகின்றது.
 
அதேபோன்று காலநிலையும் வெகுவாக மாற்றமடைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது அதிகரித்துள்ள இயற்கை அனர்த்தங்களை காரணம் காட்டும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் நிரூபு கிரகம் பூமியை நெருங்கி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர், நிரூபு எனப்படும் மர்மக்கிரகம் எமது சூரிய மண்டல சுற்றுப்பாதையில் நுழையப்போகின்றது அதனால் பூமியில் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்ற எச்சரிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
 
குறித்த விடயம் தொடர்பாக terral croft என்ற எழுத்தாளர் பூமி தற்போது பாரிய அழிவிற்கு ஆயத்தமாகியுள்ளது எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
மற்றொரு வகையில் தற்போதுள்ள விஞ்ஞானிகள் நிரூபு கிரகத்தின் இருப்பு குறித்து வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பண்டையகால மக்கள் நிரூபுவின் இருப்பை நம்பியிருந்தனர் எனக் குறிப்பிடப்படுகின்றது.
 
பண்டைய எகிப்து மக்கள் அழிவுக்கிரகமாக நிரூபினை வழிபட்டு வந்ததாகவும் அதற்காக ஆதாரங்கள் தொல்பொருள் ஆய்வுகளிலும், பண்டைய சுவர் ஓவியங்களிலும் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அதேபோன்று மதம் சார்ந்த கருத்துகளிலும் மர்மக்கிரகம் அல்லது, பூமியின் அழிவு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துவரும் சதியாலோசனை கோட்பாட்டாளர்கள் தற்போது பூமி அழிவு தொடர்பிலான அதிக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூலக்கதை