மீண்டும் வெள்ளை வேன் பீதியில் யாழ். மக்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
மீண்டும் வெள்ளை வேன் பீதியில் யாழ். மக்கள்!

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் வெள்ளை வேனில் சென்றதால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வாள்வெட்டுக் குழுவினருக்கு உளவாளியாக செயற்படுபவரென சந்தேகிக்கப்பட்ட ஒருவரை கைதுசெய்வதற்காக பொலிஸார் இவ்வாறு சென்றுள்ளனர்.
 
யாழ். ராமநாதன் வீதிப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான குறித்த இளைஞன், யாழ். பேரூந்து நிலையத்தின் முன்பாக நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
வெள்ளை வானில் சிவில் உடை தரித்து வந்த கோப்பாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன், வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்துள்ளார்.
 
இவரை கைதுசெய்ய பலதடவை முயற்சித்த போதிலும், பொலிஸ் வாகனங்களைக் கண்டு மறைந்துவிடுவதாக குறிப்பிட்ட கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அதனாலேயே வானை பயன்படுத்தி சிவில் உடையுடன் வந்து கைதுசெய்ததாக குறிப்பிட்டார்.
 
மேலும், சந்தேகநபரின் வீட்டை இன்று காலை சோதனையிட்ட போது வாளும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சந்தேகநபர் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதோடு, விசாரணையின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முன்லைப்படுத்தப்படவுள்ளார்.
 

மூலக்கதை