ராகுல் தலைவரானால் எங்கள் வேலை ‛ஈசி': யோகி கிண்டல்

தினமலர்  தினமலர்
ராகுல் தலைவரானால் எங்கள் வேலை ‛ஈசி: யோகி கிண்டல்

கோரக்பூர்: காங்., தலைவராக ராகுல் பொறுப்பேற்றால், அக்கட்சியின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கும் பா.ஜ.,வின் வேலை சுலபமாகும் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

தலைவர் ராகுல்:

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, உடல்நலக்குறைவால், சமீப காலமாக அரசியல் நடவடிக்கைகளில் பெரிய அளவில் ஈடுபடவில்லை. இதனையடுத்து, காங்., கட்சியின் தலைவர் பொறுப்பை, தற்போது அதன் துணைத்தலைவராக உள்ள ராகுல் விரைவில் ஏற்க உள்ளார்.

சுலபம்:

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், ‛காங்., தலைவராக, ராகுல் பொறுப்பேற்க உள்ளார். ஒரு விதத்தில், எங்கள் வேலை சுலபமாகி விட்டது. காங்., இல்லாத இந்தியாவை உருவாக்குவது, இனி எளிதாக நடக்கும். இதற்காக, நாங்கள் மெனக்கெட தேவையில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை