இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

தினமலர்  தினமலர்
இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: 'காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில், இன்றும், நாளையும்(நவ.,22, 23) மழை பெய்யலாம்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

பருவ மழை தீவிரம் :

இது குறித்து, சென்னை வானிலை மையம் கூறியுள்ளதாவது: வட கிழக்கு பருவ மழை, கேரளாவில் தீவிரமாகி உள்ளது. அதனால், கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களில், பரவலாக மழை பெய்துள்ளது. இன்றும், நாளையும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளாவை ஒட்டிய பகுதிகளில் கன மழையும், மற்ற இடங்களில் லேசான மழையும் பெய்யலாம்.

காரணம் :

இந்திய பெருங்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, அரபிக் கடலில் இருந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வரை பரவியுள்ள மேலடுக்கு சுழற்சி ஆகியவை தான், மழைக்கு காரணம் என, தெரிய வந்துள்ளது. இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.

மூலக்கதை