Yvelines - இரண்டாவது தடவையாக மூடப்பட்ட பள்ளிவாசல்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Yvelines  இரண்டாவது தடவையாக மூடப்பட்ட பள்ளிவாசல்!!

அவசரகாலச் சட்டம் முடிவுக்கு வந்ததும் திறக்கப்பட்ட பள்ளிவாசல் ஒன்று, மீண்டும் சனிக்கிழமை அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது. 
 
Yvelines மாவட்டத்தின் Sartrouville பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. அப்பகுதி அரச வழக்கறிஞர் இத்தகவலை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார். குறித்த பள்ளிவாசல் தீவிர மதவாதத்தை பரப்புவதாக தெரிவிக்கப்பட்டே மூடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவும் இதே காரணத்துக்காக அவசர காலச் சட்டத்தின் போது கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி மூடப்பட்டது. பின்னர் அவசரகாலச் சட்டம் முடிவுக்கு வந்ததும், மறுநாள் நவம்பர் 2 ஆம் திகதி திறக்கப்பட்டது. தற்போது கடந்த சனிக்கிழமை ஆறு மாத காலத்துக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளது. 
 
தீவிர இஸ்லாமியத்தை பரப்புவதாகவும், இளைஞர்களை தவறான வழியில் அழைத்துச் செல்வதாகவும், பயங்கரவாத்துக்கு வழி வகுப்பதாகவும் அப்பகுதி அரச வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை