கார் மோதி தொழிலாளி படுகாயம்

தினகரன்  தினகரன்

பெரம்பூர் : பெரம்பலூரை சேர்ந்தவர் பெரியசாமி (45). இவர், பிராட்வே கொண்டி செட்டி தெருவில் ரிக்‌ஷா ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ரிக்‌ஷாவை பிளாட்பாரத்தில் நிறுத்தி விட்டு பெரியசாமி ரிக்‌ஷாவிலேயே படுத்து தூங்கினார். பாரிமுனை கொண்டிச் செட்டி தெருவில் ஆட்களை இறக்கி விட்டு விட்டு ஒரு கால் டாக்சி வேகமாக திரும்பி வந்து கொண்டிருந்தது. இந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பிளாட்பாரத்தில் ரிக்‌ஷாவில் படுத்திருந்த பெரியசாமி மீது மோதியது. அருகில் படுத்திருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு பெரியசாமியை அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ராமாபுரத்தை சேர்ந்த சாத்தையா (34) என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். கால் டாக்சி டிரைவர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டி வந்தாரா அல்லது குடித்து விட்டு ஓட்டினாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூலக்கதை