தண்ணீர் என நினைத்து பினாயில் குடித்த வாலிபர் சீரியஸ்

தினகரன்  தினகரன்

சென்னை : சென்னை ஆயிரம் விளக்கு குலாம் அபுஸ்கான் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (18). நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது யுவராஜ், தண்ணீர் பாட்டில் என நினைத்து வீட்டில் இருந்த பினாயிலை தவறுதலாக குடித்துள்ளார். இதனால், சிறிது ேநரத்தில் வாந்தியுடன் மயங்கி கீழே விழுந்தார். இதைபார்த்த பெற்றோர் ராயப்ேபட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மூலக்கதை