புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புதுச்சேரி போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இன்று இரவு முதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 3 நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஊதிய பாக்கியை கண்டித்து 700க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மூலக்கதை