தென்னை மரத்திலிருந்து திருடனை இறக்க வானவெடிகளை கொளுத்திய பொலிஸார்!

PARIS TAMIL  PARIS TAMIL
தென்னை மரத்திலிருந்து திருடனை இறக்க வானவெடிகளை கொளுத்திய பொலிஸார்!

 

திருட்டுத்தனமாக மரத்தில் ஏறி தேங்காய் பறித்த நபரை பொலிஸார் வானவெடி கொளுத்தி கீழே இறக்கி கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
 
வாரியபொல, மினுவென்கெவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
 
குறித்த பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் தேங்காய்களை திருட்டுத்தனமாக பறித்து கொண்டிருப்பவர் தொடர்பில் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், தென்னை மரத்தில் இருந்தவரை கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். 
 
எனினும் அவர் கீழே இறங்கவில்லை. மூன்று மணித்தியாலயங்களாக போராடிய பொலிஸார் திருடனை பயமுறுத்துவதற்காக வானவெடியை அவரை நோக்கி செலுத்தியுள்ளனர்.
 
இதையடுத்து அந்த திருடன் மரத்தில் இருந்து இறங்கி கீழே வரவே பொலிஸார் நபரை கைது செய்துள்ளனர். 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மூலக்கதை