இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
இந்தியா  இலங்கை ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து முதலாவது டெஸ்ட் போட்டியில் தற்போது விளையாடி வருகின்றது.
 
முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரிப்பாக ஆடி வருவதால் இந்த போட்டி டிராவை நோக்கி செல்வதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததும் வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளது. 
 
இந்த நிலையில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது.
 
பகலிரவு போட்டியான இந்த இரு போட்டிகளும் மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த் நிலையில் தற்போது இரண்டு மணி நேரம் முன்னதாக அதாவது 11.30க்கு போட்டி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டிசம்பர் மாதம் வட மாநிலங்களில் கடும்பனி நிலவும் என்பதால் தர்மசாலா மற்றும் மொஹாலி ஆகிய இரு இடங்களில் நடைபெறும் போட்டிகள் இரண்டு மணி நேரம் முன்னதாக தொடங்கும் என்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
 

மூலக்கதை