யாழில் 41 பேர் அதிரடியாக கைது!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் 41 பேர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணத்தில்  41 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அண்மைய சில நாட்களாக இடம்பெற்றுவந்த வாள் வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
யாழ்ப்பாணம் - கோப்பாய் - மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த இரு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
வாள் வெட்டுக்கள் இடம்பெற்ற இடங்களை வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்ததுடன் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கண்கானித்துள்ளார்.
 
வாள்வெட்டு சம்பவங்களில் காயமடைந்தவர்களை பிரதி பொலிஸ் மா அதிபர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
 
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதிக் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை