ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு!!
கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட செல்வாக்கு சரிவைத் தொடர்ந்து, தற்போது நவம்பர் மாதத்தில் மீண்டும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
இந்த நவம்பர் மாதத்தில் மக்ரோனின் செல்வாக்கு 4 புள்ளிகளால் அதிகரித்து, தற்போது 46 புள்ளிகள் செல்வாக்குடன் இருக்கின்றார். கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 41 வீதமானவர்கள் 'மிகவும் திருப்த்தி' எனவும், 5 வீதமானவர்கள் திருப்த்தி எனவும், 18 வீதமானவர்கள் திருப்த்தி இல்லை எனவும், 2 வீதமானவர்கள் 'மிகவும் திருப்த்தி இல்லை!' எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, பிரதமர் எத்துவா பிலிப்பின் செல்வாக்கு 2 புள்ளிகளால் அதிகரித்து, தற்போது 49 வித செல்வாக்குடன் உள்ளார். இந்த கருத்துக்கணிப்பு தொலைபேசியூடாக 1,964 பேர்களிடம், நவம்பர் 10 ஆம் திகதியில் இருந்து 18 ஆம் திகதி வரை எடுக்கப்பட்டிருந்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த கருத்துக்கணிப்பை iFop நிறுவனம் எடுத்திருந்தது.