ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் செல்வாக்கு அதிகரிப்பு!!

கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஏற்பட்ட செல்வாக்கு சரிவைத் தொடர்ந்து, தற்போது நவம்பர் மாதத்தில் மீண்டும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. 
 
இந்த நவம்பர் மாதத்தில்  மக்ரோனின் செல்வாக்கு 4 புள்ளிகளால் அதிகரித்து, தற்போது 46 புள்ளிகள் செல்வாக்குடன் இருக்கின்றார். கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 41 வீதமானவர்கள் 'மிகவும் திருப்த்தி' எனவும், 5 வீதமானவர்கள் திருப்த்தி எனவும், 18 வீதமானவர்கள் திருப்த்தி இல்லை எனவும், 2 வீதமானவர்கள் 'மிகவும் திருப்த்தி இல்லை!' எனவும் தெரிவித்துள்ளனர். 
 
அதேவேளை, பிரதமர் எத்துவா பிலிப்பின் செல்வாக்கு 2 புள்ளிகளால் அதிகரித்து, தற்போது 49 வித செல்வாக்குடன் உள்ளார். இந்த கருத்துக்கணிப்பு தொலைபேசியூடாக 1,964 பேர்களிடம், நவம்பர் 10 ஆம் திகதியில் இருந்து 18 ஆம் திகதி வரை எடுக்கப்பட்டிருந்தது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த கருத்துக்கணிப்பை iFop நிறுவனம் எடுத்திருந்தது.

மூலக்கதை