இந்தியா வருகிறது ஜாவா மோட்டோ பைக்
மஹிந்திரா நிறுவனம், சமீபத்தில், ஜாவா, இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனத்தை வாங்கியது. அந்நிறுவனம், ஐரோப்பாவில், ‘ஜாவா மோட்டோ 350’ ரக பைக்கை அறிமுகம் செய்தது. அதை தொடர்ந்து, இந்தியாவிலும் அறிமுகப்படுத்த, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதற்காக, நமக்கு ஏற்ற மாற்றங்களை செய்வதற்காக, மஹிந்திராஅண்டு மஹிந்திரா டூ – வீலர்ஸ், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம், பணிகளை துவங்கி உள்ளது. இதற்காக, பிரத்யேக விற்பனை நெட்வொர்க்கை, மஹிந்திரா துவங்க உள்ளது. இந்த பைக்கில், ரெட்ரோ, கிளாசிக், மிலிட்டரி என, மூன்று மாடல்கள் உள்ளன. இது, ராயல் என்பீல்டு கிளாசிக் – 350 மற்றும் புல்லட் – 350 ஆர் ஆகியவற்றுக்கு, கடுமையான போட்டியாக இருக்கும் என, தெரிகிறது.