சார்சல் - பொதுமக்கள் மீது காவற்துறை அதிகாரி சரமாரியான துப்பாக்கிச் சூடு - அதிர்ச்சிச் சம்பவம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
சார்சல்  பொதுமக்கள் மீது காவற்துறை அதிகாரி சரமாரியான துப்பாக்கிச் சூடு  அதிர்ச்சிச் சம்பவம்!!

நேற்று இரவு, அதாவது சில மணிநேரங்களின் முன்னர், ஒரு காவற்துறை அதிகாரி, பொதுமக்கள் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் சார்சல் (Sarcelles  - Val-d’Oise)  நகரின் குடியிருப்புப் பகுதியில், மாநகரசபைக்கு மிக அருகாமையில், rue du Bocage இல் நடந்துள்ளது.
 
 
இந்தச் சம்பவத்தில் மூவர் உடனடியாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் நடாத்திய காவற்துறை அதிகாரி தனது சேவைத் துப்பாக்கியினாலேயே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
 
இந்தத் தாக்குதலையடுத்து உடனடியாக அங்கு வந்த காவற்துறையினர், சிற்றுந்தினுள், வெளியில் வீதியில், ஒரு வீட்டிற்குள் என, துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியானவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டுள்ளனர்.
 
முதற்கட்டத் தகவலின் படி, பரிஸ் காவற்துறையில் பணிபுரியும் இந்த அதிகாரி, மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றினாலேயே, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன.
சார்சல் - பொதுமக்கள் மீது காவற்துறை அதிகாரி சரமாரியான துப்பாக்கிச் சூடு - அதிர்ச்சிச் சம்பவம்!!
 
நேற்று இரவு, அதாவது சில மணிநேரங்களின் முன்னர், ஒரு காவற்துறை அதிகாரி, பொதுமக்கள் மீது சரமாரியான துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் தன்னையும் சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் சார்சல் (Sarcelles  - Val-d’Oise)  நகரின் குடியிருப்புப் பகுதியில், மாநகரசபைக்கு மிக அருகாமையில், rue du Bocage இல் நடந்துள்ளது.
 
இந்தச் சம்பவத்தில் மூவர் உடனடியாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதல் நடாத்திய காவற்துறை அதிகாரி தனது சேவைத் துப்பாக்கியினாலேயே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
 
இந்தத் தாக்குதலையடுத்து உடனடியாக அங்கு வந்த காவற்துறையினர், சிற்றுந்தினுள், வெளியில் வீதியில், ஒரு வீட்டிற்குள் என, துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியானவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டுள்ளனர்.
 
முதற்கட்டத் தகவலின் படி, பரிஸ் காவற்துறையில் பணிபுரியும் இந்த அதிகாரி, மனைவியுடன் ஏற்பட்ட தகராற்றினாலேயே, இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்ட்டுள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன.
 

மூலக்கதை