பரிஸ் - பெரிய பள்ளிவாசலுக்கு அருகே கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  பெரிய பள்ளிவாசலுக்கு அருகே கத்தியை காட்டி மிரட்டிய நபர் கைது!!

இன்று நவம்பர் 18 ஆம் திகதி, சனிக்கிழமை காலை நபர் ஒருவர் பெரிய பள்ளிவாசலுக்கு அருகே கத்தியை காண்பித்து மிரட்டியுள்ளார். குறித்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
பரிஸ், ஐந்தாம் வட்டாரத்தில் உள்ள Grande Mosquée அருகே, நபர் ஒருவர் கத்தி ஒன்றை காண்பித்து அங்குள்ளவரை மிரட்டியுள்ளார். பின்னர் பள்ளிவாசல் நிர்வாகிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி பிடித்துள்ளனர். குறித்த நபர் 'அல்லா ஹூ அக்பர்' என சத்தம் எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்வதற்காக குறித்த நபர் மீது கண்ணீர்புகை வீசியதாகவும், குறித்த நபர் நிலை குலையும் போது காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் யாரையும் தாக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கைது செய்யப்பட்ட நபர் 33 வயதுடைய துனிசிய நாட்டு குடியுரிமை கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் பள்ளிவாசல் நண்பகலில் வழமைக்குத் திரும்பியது.

மூலக்கதை