பறவையுடன் செல்பி எடுத்து வாட்ஸ்அப்பில் பரப்பியவர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பறவையுடன் செல்பி எடுத்து வாட்ஸ்அப்பில் பரப்பியவர் கைது

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த மங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (27). சிங்கப்பூரில் பணிபுரிகிறார்.

விடுமுறையில் ஊர் வந்திருந்த தமிழரசன் சில தினங்களுக்கு முன் அப் பகுதியில் விற்பனைக்கு வந்த 2 மடையான் பறவையை விலைக்கு வாங்கி அதனுடன் செல்பி எடுத்து தனது வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனைக்கண்ட சிலர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட வனத்துறையினர், தமிழரசனை கைது செய்து முத்துப்பேட்டை வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் தமிழரசன்  மடையான் பறவையை விலைக்கு வாங்கி அதனுடன் செல்பி எடுத்து  வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பரப்பியதையும், பிறகு அந்த பறவையை அவரது தந்தை மோகன்தாஸ் மூலம் சமைத்து சாப்பிட்டதையும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.   இதனையடுத்து வனத்துறையினர் பறவையை விலைக்கு வாங்கி வாட்ஸ்அப்பில் பரப்பியதற்காக வனத்துறை சட்டப்படி ரூ. 25 ஆயிரம் அபராதமும், அதனை சமைத்து சாப்பிட்டதற்காக அவரது தந்தை மோகன்தாசுக்கு ரூ.

1,000 அபராதமும் விதித்தனர்.

.

மூலக்கதை