கணவர் திட்டியதால் மனைவி தீக்குளிப்பு பெரம்பூர் அருகே பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கணவர் திட்டியதால் மனைவி தீக்குளிப்பு பெரம்பூர் அருகே பரபரப்பு

பெரம்பூர்: பெரம்பூர் அடுத்த திருவிக நகர் முகமதியர் தெருவை சேர்ந்தவர் யூசுப் (48). பொம்மை வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி சம்ஷாக் பேகம் (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

யூசுப்க்கு மனைவி மீது சந்தேகம் இருப்பதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து யூசுப் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டுக்கு வெளியில் சம்ஷாக்  பேகமும் ஒரு வாலிபரும் பேசியுள்ளனர். இதை பார்த்து ஆத்திரமடைந்த  யூசுப், தகாத வார்த்தைகளால் மனைவியை திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்திருந்த  சம்ஷாக்பேகம், தனது உடலில் மண்ணெண்ணை  ஊற்றிதீவைத்துள்ளார். தீ உடல் முழுவதும் பரவியதால் அலறிதுடித்தார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். கருகிய நிலையில் இருந்த சம்ஷாக்பேகத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   இதுகுறித்து திருவிக நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவர் திட்டியதால் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

.

மூலக்கதை