காற்று மாசுபாட்டுக்கு எதிரான போட்டியை வெல்ல அனைவரும் ஒன்றாக விளையாட வேண்டும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காற்று மாசுபாட்டுக்கு எதிரான போட்டியை வெல்ல அனைவரும் ஒன்றாக விளையாட வேண்டும்

கொல்கத்தா: நாட்டின் தலைநகர் டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாட்டால், மக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். டெல்லியை சேர்ந்தவரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, இது தொடர்பாக டிவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: காற்று மாசுபாட்டிற்கு எதிரான இந்த போட்டியை வெல்ல வேண்டுமானால், நாம் அனைவரும் ஒன்றாக விளையாட வேண்டும்.

ஏனெனில் மாசுபாட்டின் அளவை குறைப்பதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. குறிப்பாக டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது.



முடிந்தவரை தங்களது பயணங்களை ஒன்றாக மேற்கொள்ளும்படியும், பஸ் மற்றும் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்தும்படியும் மக்களை கேட்டு கொள்கிறேன். இதை நாம் செய்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அந்த வீடியோவில் விராட் கோஹ்லி பேசியுள்ளார். விராட் கோஹ்லி தற்போது இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணியுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை