பிரதமர் மோடி தலைமையில் தொழில் செய்ய மிகவும் சிறந்த நாடாக இந்தியா மாறியுள்ளது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரதமர் மோடி தலைமையில் தொழில் செய்ய மிகவும் சிறந்த நாடாக இந்தியா மாறியுள்ளது

சிங்கப்பூர்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இந்தியா தொழில் செய்ய மிகவும் சிறந்த நாடாக மாறியுள்ளது என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இது தொடர்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற தொழில் தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தொழில் செய்வதற்கு உகந்த நாடுகளின் தர வரிசை பட்டியலை உலக வங்கி கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.

அதில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி உள்ளது. மோடி தலைமையில் தொழில் செய்ய சிறந்த நாடாக இந்தியா மாறியுள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு எலக்ட்ரானிக் பண பரிவர்த்தனையில் மிகப்பெரிய அளவில ்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பல்வேறு வரி விதிப்புக்கு பதிலாக ஒரே சீரான வரியை விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது.



வங்கிகள் மூலமாக நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளும் அதிகரித்து வருகின்றன. அமைப்பு சார்ந்த  மற்றும் சாராத தொழில்துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன.

வரி விதிப்பு முறையில் அமைப்பு ரீதியாக சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்திய பொருளாதாரம் நீண்ட காலப் பலன்களை அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு ஜெட்லி பேசினார்.


.

மூலக்கதை