பிளஸ் 2 தேர்வு எழுத ஆதார் கட்டாயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிளஸ் 2 தேர்வு எழுத ஆதார் கட்டாயம்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்கள் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ந் தேதி தொடங்குகிறது.

இந்த 2 தேர்வுகளையும் சுமார் 67 லட்சம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.

 பள்ளி இறுதி பொதுத் தேர்வின்போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதையடுத்து வரும் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் அட்டையை அந்த மாநில கல்வி வாரியம் கட்டாயமாக்கி உள்ளது.

இதுபற்றி உத்தரபிரதேச கல்வி வாரியம் நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘10, 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு கட்டாயம் தங்களுடன் ஆதார் அட்டையை  எடுத்து வரவேண்டும். இல்லையென்றால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

போலியான பதிவு மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை தடுக்கவே ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது’ என கூறப்பட்டு இருக்கிறது.

உ. பி. அரசின் புது உத்தரவால் ஆதார் அட்டை இன்னும் கிடைக்கப்பெறாத மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசின் நல திட்டங்களுடன் ஆதார் இணைப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது உ. பி.

அரசின் இந்த உத்தரவையும ்எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக சமூக நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

.

மூலக்கதை