ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலில் பள்ளி மாணவன் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலில் பள்ளி மாணவன் பலி

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் தியாகராஜன் (15).

இவர், ஆரணி பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பெரிதும் அவதிப்பட்டு வந்தார்.   இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று காலை தியாகராஜனை சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை தியாகராஜன் பரிதாபமாக பலியானார். தியாகராஜனுக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனை விவரங்கள் குறித்து அவரது பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

மகனை இழந்து பெற்றோர் கதறி அழுதது மருத்துவமனையில் அனைவர் நெஞ்சையும் உலுக்கியது.

.

மூலக்கதை