15 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்ற ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
15 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டு குழந்தை பெற்ற ...

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் 15 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு கொண்டு ஆண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். அந்த சிறுவன் அந்த பெண்ணின் 14 வயது மகளின் நண்பன் ஆவார்.


    ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்த அந்த பெண் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது 14 வயது மகளின் நண்பனான 15 வயதான சிறுவனுடன் பழகியுள்ளார்.

வீட்டுக்கு வரும் அந்த சிறுவனுக்கு ஆல்கஹால் கொடுத்து போதையாக்கி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். மேலும் தாங்கள் உடலுறவு கொண்ட புகைப்படங்களையும் அந்த சிறுவனுக்கு அனுப்பியுள்ளார்.   இதனையடுத்து சிறுவனால் கர்ப்பமான அந்த பெண் ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.

இதனையடுத்து மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மரபனு பரிசோதனையில் அந்த சிறுவன்தான் குழந்தையின் தந்தை என்பது உறுதி செய்யப்படதை அடுத்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.   இளம் வயது சிறுவனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்ட குற்றத்திற்காக அந்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்.

இதனையடுத்து அந்த ஆண் குழந்தை அந்த சிறுவனின் வீட்டில் உள்ளவர்களின் பராமரிப்பில் தற்போது உள்ளது.

.

மூலக்கதை