களத்தில் 120 சதவீத உழைப்பை கொடுக்கிறேன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
களத்தில் 120 சதவீத உழைப்பை கொடுக்கிறேன்

கொல்கத்தா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை மறுநாள் (16ம் தேதி) தொடங்குகிறது.

இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அளித்த பேட்டி:
ஒரு அணியாக ஒவ்வொரு பந்தும் வெற்றி பெறும் நிகழ்வாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

அதற்காக எனது 120 சதவீத உழைப்பை கொடுக்கிறேன்.

நான் இயற்கையாகவே அப்படி இருப்பதால், கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. களத்தில் போதுமான அளவுக்கு நான் தீவிரமாக இல்லாவிட்டால், எனது விளையாட்டு ஒன்றும் இல்லாததாகி விடும்.

விளையாட்டு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. என்னை பொறுத்தவரை அணிக்காக எனது கடமையை சரியாக ஆற்ற வேண்டும்.

எனவே என்னை பற்றி ஒரு சிலர் என்ன பேசுகிறார்கள்? என்ன எழுதுகிறார்கள்? என்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை