இந்திய அணியை கண்டு பயப்படவில்லை: இலங்கை பயிற்சியாளர் பேட்டி
கொல்கத்தா: இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் கொல்கத்தாவில் அளித்த பேட்டி: சொந்த மண்ணில் இந்தியாவிற்கு எதிரான நாங்கள் படுதோல்வியை சந்தித்தோம். ஆனால் அதில் இருந்து பாடம் கற்று, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினோம்.
முன்பு இருந்ததை விட முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியா உலகின் சிறந்த அணியாக உள்ளது.
திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பல அணிகள் இந்தியாவில் தோல்வி அடைந்துள்ளன.
அதற்காக இந்தியாவை கண்டு பயப்படவில்லை. அவர் களுக்கு கடும் சவால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
எங்கள் பலத்தின் மீது கவனம் செலுத்தி தயாராகி வருகிறோம், என்றார்.