அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலி: தேவாலயத்தில் புகுந்து ஆசாமி வெறிச்செயல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் துப்பாக்கி சூட்டில் 27 பேர் பலி: தேவாலயத்தில் புகுந்து ஆசாமி வெறிச்செயல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சதர்லேண்ட் என்ற இடத்தில் தேவாலயம் ஒன்றில் வழிபாடு நடைபெற்றது. அப்போது மர்ம நபர் ஒருவர்  தேவாலயத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டார்.

இதில் தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 27 பேர் பலியாயினர். மேலும் 30க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்தனர்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் 27 பேர் பலியாயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பலரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு  அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.    துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை சுட்டு கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில், சதர்லேண்ட் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுடன் கடவுள்  துணையிருப்பார்.

ஜப்பானில் இருந்து இந்த சம்பவத்தை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.

புலனாய்வு நிறுவனங்களும் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.   இதை தொடர்ந்து சதர்லேண்ட் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுஅமெரிக்காவில் கடந்த 1 மாதத்திற்குள் மட்டும் இது 4வது முறையாக நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை