எங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது: – அற்புதம்மாள் உருக்கம்

என் தமிழ்  என் தமிழ்
எங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது: – அற்புதம்மாள் உருக்கம்

பேரறிவாளன் பரோல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இது குறித்து அவரது தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:பேரறிவாளனின் தந்தைக்கு உடல் நிலை இன்னும் குணமாகவில்லை. அவர் நலமாகும் வரை பேரறிவாளன் உடன் இருக்க வேண்டுமென்று பரோலை நீட்டிக்க கேட்டு முதல் அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன்.

இன்று மாலைக்குள் முதல்-அமைச்சரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.அரசியல் கட்சி தலைவர்கள் பேரறிவாளன் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை