வடக்கிலும் தெற்கிலும் மனிதநேயமிக்க மனிதர்கள் இருக்கின்றார்கள்
இலங்கை நாட்டில் சிங்கள மக்கள் மட்டுமே நல்லவர்கள் என நாம் நினைத்துவந்தோம். ஆனால் வடக்கிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பயாகல இந்து வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் நேற்று முன்தினம் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
வடக்கிலும் தெற்கிலும் மனிதநேயமிக்க மனிதர்கள் இருக்கின்றார்கள். குறுகிய அரசியல் நோக்கமும் அதிக ஆசை பிடித்த தலைவர்களுமே இந்த மனித நேயத்திற்கு வேட்டுவைக்கின்றனர்.
ஒரே நாடு ஒரே தேசம் என்று இருந்தால் ஒரு தலைவர் இருப்பார். ஆனால் நாடு சிறு துண்டுகளாக இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிக்-கப்பட்டால் பல தலைவர்கள் இருப்பார்கள். சிறந்த தலைமைத்துவம் உருவாக பிணக்குகள் தீர்க்கப்படவேண்டும். அவ்வாறு செய்பவர் சிறந்த தலைவராக உருவாகுவார். அனைவரும் ஒன்றுபட்டால் தலைமைத்துவம் உருவாகும்.
ஆகவே அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக போரா-டுவதை நிறுத்திக்கொள்ள வேண்-டும் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!