டென்மார்க் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த் கிடாம்பி

தினமலர்  தினமலர்
டென்மார்க் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த் கிடாம்பி

ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

டென்மார்க்கிலுள்ள ஓடென்ஸ் நகரில் நடக்கும் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிடாம்பி, உலகின் நம்பர்-1 வீரரான விக்டர் ஏக்சில்சனை எதிர்கொண்டார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிடாம்பி, 14-21, 22-20, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தியாவின் பிரனாய் மற்றும் சாய்னா இருவரும் காலிறுதியில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தனர்.

மூலக்கதை