ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

தினகரன்  தினகரன்

சென்னை: ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அக்டோபர் 25 முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆழியாறு அணை நீர்திறப்பு மூலம் 22,332 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இதேபோல் அக்டோபர் 22 முதல் விழுப்புரம் மாவட்டம் மணிமுக்தா அணையில் இருந்தும் நீர் திறக்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 5,493 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை