மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் ரஞ்சித் குமார் ராஜினாமா
டெல்லி: மத்திய அரசின் துணை தலைமை வழக்கறிஞர் ரஞ்சித் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரஞ்சித் குமார் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பினார். மேலும் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட விரும்பிய காரணத்தால் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.