மக்கள் கை தட்டும் கருத்துக்கள் எல்லாம் நல்ல கருத்துக்கள் என சொல்ல முடியாது: தமிழிசை

தினகரன்  தினகரன்

சென்னை: படத்தில் விமர்சிப்பது கருத்துச்சுதந்திரம் என்றால் அதனை நாங்கள் விமர்சிப்பதும் கருத்துசுதந்திரமே என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்கள் கை தட்டும் கருத்துக்கள் எல்லாம் நல்ல கருத்துக்கள் என எடுத்துக்கொள்ள முடியாது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பணமதிப்பிழப்பு மட்டுமல்ல கமல் மன்னிப்பு கேட்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கிறது என்றும் பணமதிப்பிழப்பால் திருடுவதும் குடிப்பதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது என தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

மூலக்கதை