தார் கொள்முதலில் ஊழல் : தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு

தினகரன்  தினகரன்

சென்னை: தார் கொள்முதல் செய்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு தார் வாங்கியதில் ரூ.1,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. 2014-2015, 2015-2016-ல் மட்டும் ரூ.800 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சாலைக்கு தேவையான தார் விலை குறைந்த போதும் அதிக விலைக்கு வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மூலக்கதை