70 ஆண்டுகளாக தமிழகத்தில் வசிப்பதாக குஜராத்தியர்கள் நெகிழ்ச்சி

தினகரன்  தினகரன்

தென்காசி: தென்காசி அருகே வசிக்கும் குஜராத்தியர்கள் ஏராளமானோர் பாரம்பரிய முறைப்படி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். தென்காசி அருகே உள்ள பெரானூரில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கடந்த 70 ஆண்டுகளாக அங்கு தங்கி தொழில் செய்து வரும் அவர்கள் தமிழகத்தில் வசித்து வந்தாலும், பாரம்பரிய முறைப்படி அவர்கள் தீபாவளியை கொண்டாடுவதில் தவறுவதில்லை. குஜராத் மக்களுக்கு இன்று புத்தாண்டு பிறக்கிறது. இதனால் புது கணக்கு தொடங்கி அவர்கள் வர்த்தகத்தை மேற்கொள்கின்றனர்.

மூலக்கதை