'சிறுபான்மையினரை பாதுகாக்க பாக்., அரசு கடமைப்பட்டுள்ளது'

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்: ''சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க, என் அரசு கடமைப்பட்டுள்ளது,'' என, பாக்., பிரதமர்,ஷாகித் அப்பாஸி கூறினார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹிந்துக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, அப்பாஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையினர் நலனையும், அவர்களது அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க, பாக்., அரசு கடமைப்பட்டுள்ளது. முகமது நபியின் அற்புதமான கொள்கைகள், சிறுபான்மையினர் உரிமைகளை பாதுகாக்க, எங்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.
தீபாவளியை கொண்டாடும் ஹிந்துக்களுக்கு, வாழ்வில், அமைதியும் மகிழ்ச்சியும் என்றும் நிலைக்க வாழ்த்துகிறேன். எந்த மதமும், மற்ற மதங்கள் மீது, வெறுப்புணர்வு கொள்ள வேண்டும் என, போதிக்கவில்லை. அமைதி, ஒற்றுமை, அன்பு, மனிதநேயம் ஆகியவற்றைதான், அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. மனிய நேயத்தின் அடிப்படையில், மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை