ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 43 வீரர்கள் பலி

தினமலர்  தினமலர்
ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 43 வீரர்கள் பலி

காந்தகார்: ஆப்கானிஸ்தானின் ராணுவ மையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 43 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஒரே வாரத்தில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது இது 3வது முறையாகும்.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: காந்தகார் மாகாணத்தில் உள்ள மைவாந்த் மாவட்டத்தில் உள்ள ராணுவ மையத்தை பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் குறைந்தது 43 வீரர்கள் பலியானார்கள். 9 பேர் காயமடைந்தனர். 6 பேரை பற்றிய தகவல் ஏதுமில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை