இவ்வருடத்தில் 13 தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன! - மக்ரோன் தெரிவிப்பு!!
இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் இருந்து 13 மிகப்பெரிய தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பயங்கரவாத்துக்கு எதிராக புதிய காவல்துறை திட்டத்தை அறிவித்த மக்ரோன், அதன் போதே இதனை குறிப்பிட்டார். இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை 13 பயங்கரவாத தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. ஒரு தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டால், நிச்சயம் அதில் இருந்து இரண்டாவது தாக்குதலுடன் தொடர்பு இருக்கும்!' என அவர் தெரிவித்தார்.
தவிர, 'காவல்துறையினர் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும். கோழைத்தனமான, தாங்கிக்கொள்ள முடியாத இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக பலமாக போரிடவேண்டும்!' என மக்ரோன் வீரர்களிடம் கேட்டுக்கொண்டார்.