இணையக் குற்றங்களைக் கண்காணிக்கும் புதிய சேவை!!

PARIS TAMIL  PARIS TAMIL
இணையக் குற்றங்களைக் கண்காணிக்கும் புதிய சேவை!!

இணையக் குற்றங்கள் மற்றும் இனையவழி விரோதங்களைத் தடுக்கும் cybermalveillance சேவைக்குரிய கண்காணிப்பு மையம் ஒன்றையும் அதற்குரிய இணையத் தளத்தினையும் அரசாங்கம் உருவாக்கி உள்ளது. இணைய வழி விரோதங்களினால் பாதிக்கப்படும் தனி நபர்கள், சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள், மற்றும் பதிப்படையும் ஏனையவர்களுடனும் நேரடியாக இந்தச் சேவையானது தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்.
 
 
பாதிப்படைபவர்களிற்கான மேலாதிகப் பாதிப்புகளை, இணையவழித் தாக்குதல்களை, தடுக்கவும் மற்றும் மட்டுப்படுத்தவும் இந்த மையத்தினால் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
அதே நேரம் இப்படியான குற்றங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான அறிவுரைகள் அடங்கிய காணொளிகள், இணையப் பாவனையாளர்களிற்கு இந்த மையத்தினால் பரப்பப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை