ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்; பிரதாம் யு.எஸ்.ஏ., எனப்படும், அரசு சாரா அமைப்பு, இந்தியாவில், ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காக, 3.25 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
பிரதாம் யு.எஸ்.ஏ., என்ற அரசு சாரா அமைப்பு, இந்தியாவில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு கல்வி அறிவு அளிக்கும் நோக்கில், அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் நிதி திரட்டி வருகிறது. இந்த அமைப்பு, இதுவரை, 3.25 கோடி ரூபாய் திரட்டி, ஏழை மாணவர்களுக்கு உதவியுள்ளது.
சமீபத்தில், வாஷிங்டன் நகரின், புறநகர் பகுதியில், பிரதாம் யு.எஸ்.ஏ., அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில், 360 பேர் பங்கேற்றனர். அதில், நடிகர் ஆர்.மாதவன் பங்கேற்று, சிறப்புரையாற்றி, ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிப்பதற்கான நிதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அந்த நிகழ்ச்சியில், 1.75 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

மூலக்கதை